கண்டடையும் உன்மத்தம்



இரவு பனியாய்
நோய்மையின் பேரச்சம் நீக்கமற்று கிடக்கிறது.
அரவம் தழுவிடிலோர் மேனி
உடற்கவசங்களை தரித்துக் கொண்டது.
முன் இறந்த காட்டுயுயிர் ஆவிகளின் தாகத்திற்கு
வற்றாத நீருற்றுகளை அடைய இன்னும் சில கணங்களே.
மிகு உலகில் மிகு வெக்கையில்
மிகு அலைதலில் மிகு தனிமையில்
கண்டடைய கூடும் முரண்களின் அடையாளம்.

நன்றி : மலைகள்.காம்
ஓவியம் : Jean basquiat boxer(இணையத்தில் எடுக்கப்பட்டது)

No comments: