நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன


 


என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன 
பூரண அமைதியைப் எப்பொழுதும் காணுற்று நிற்கிறது
ஒரு கரும்புலி 
உதயத்தின் தளிர்மஞ்சளை விழுங்க காத்திருக்கிறது
பருவம் கடத்துகிறது மழை
வேட்கையின் நடனம் ஓலமிடுகிறது
அதற்கு தெரிந்திருக்கும்
சிதறுண்ட சிற்பங்களின் இறுதிகீதம்
இவ்வோலம் மென்று.

என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன
நூற்றாண்டுகள் கடந்து
கொப்பளித்து கொப்பளித்து
ஓடும் அந்த நதியிலிருந்தே
இன்றும் எழுந்தான் கதிரவன்
பறவைகளின் பாடலை அணில் தத்தும் மரங்கள் பாடுகின்றன   
காற்று உதிர்ந்த முல்லை பூக்களை
தொடுத்துக் கொண்டு இருக்கிறாள் நிம்மி.


உதய காலத்தில் ஒரு மண்புழு நெளிதலையும்
காணக் கிடைக்காதப் முப்பாட்டனின் எஞ்சிய நிலம்
என்  கனவு நிலத்தில் பாம்புகள் மேய்கின்றன.

நன்றி : யாவரும்.காம்

No comments: